Skip to content
Home » சா. கந்தசாமி

சா. கந்தசாமி

உத்தி, புத்தி, சித்தி

எழுதத் தொடங்கிய காலத்தில் வாசனை திரவிய மொழிக்கு அடுத்தபடி என்னை ஆட்டிப் படைத்துக்கொண்டிருந்த இன்னொரு கெட்ட சக்தி, உத்திகள். பொதுவாக இறக்குமதிப் பொருள்களின் மீது நமக்கு மோகம் அதிகம். தேவை இருந்து பயன்படுத்துவது வேறு. அரிசிச் சோறெல்லாம் ஆகாது; தினசரி மூன்று வேளை ஜாங்கிரி பிழிந்துதான் சாப்பிடுவேன் என்பது அழிச்சாட்டியம் அல்லாமல் வேறல்ல. ஆனால் அது ஒரு போதை. எழுத்தைத் தவிர வேறெதுவும் எனக்கில்லை என்னும் மனநிலையில், படிப்பதும் எழுதுவதுமாக… Read More »உத்தி, புத்தி, சித்தி

கதையைத் தூக்கி வெளியே வை!

பல வருடங்களுக்கு முன்னர், சென்னை அண்ணா சாலையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் ஒரு எழுத்தாளர் சந்திப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெயர் மறந்துவிட்டது. ஓர் அமெரிக்கப் பெண் எழுத்தாளரை அன்று சென்னை வாழ் தமிழ் எழுத்தாளர்கள் சிலர் சந்தித்தோம். அசோகமித்திரன் போன்ற மிகப்பெரிய எழுத்தாளர்களில் இருந்து என்னைப் போன்ற, அந்நாளைய எழுத்துச் சிறுவர்கள் வரை பல்வேறு தரத்திலான எழுத்தாளர்கள் அழைக்கப்பட்டிருந்தார்கள். அந்தப் பெண்மணி சொற்பொழிவாற்றி முடித்த பிறகு கலந்துரையாடல் தொடங்கியது.… Read More »கதையைத் தூக்கி வெளியே வை!

முதல் பாடம்

bukpet வழங்கும் WriteRoom எழுத்துப் பயிற்சிக் கூடத்துக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன். எழுத்தார்வம் ஒன்றைத் தவிர வேறு திறமையோ, அறிவோ, படிப்போ, பின்புலமோ இல்லாமல் திரிந்துகொண்டிருந்தவன் நான். என் பெரியப்பாவின் சிபாரிசால் எனக்கு 1989ம் ஆண்டு அமுதசுரபி மாத இதழில் வேலை கிடைத்தது. 400 ரூபாய் சம்பளம். அங்கே தட்டுத் தடுமாறி எழுதப் பழகிக்கொண்டிருந்தபோது எழுத்தாளர் ம.வே. சிவகுமாரின் தொடர்பும் நட்பும் தாம்பரம்-கடற்கரை ரயில் பயணத்தின்போது தற்செயலாக வாய்த்தது. சிவகுமார்தான்… Read More »முதல் பாடம்