Skip to content
Home » யாருக்கு?

யாருக்கு?

இதுவரை எதுவுமே எழுதியிராதவர்கள். ஆனால் எழுத வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள்.

எழுத முயற்சி செய்துகொண்டிருப்பவர்கள். ஆனால் சரியாக வரவில்லை என்று கவலைப்படுபவர்கள்.

ஒரு சில பிரசுரங்கள் நடந்திருக்கின்றன; ஆனாலும் உரிய கவனம் கிடைக்கவில்லை என்று வருந்துபவர்கள்.

நிறைய பிரசுரமாகியிருக்கிறது; ஆனாலும் ஏதோ ஒன்று குறைகிறது என்று தவிப்பவர்கள்.

தோன்றிற் புகழொடுதான் தோன்றுவேன் என்ற திட சித்தமுடன் களமிறங்குபவர்கள்.

எழுத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் முயற்சி செய்து பார்க்கவும் சாதனை புரியவும் ஆர்வம் கொண்டவர்கள்

சலிக்காமல் எழுதத் தயாராக இருப்பவர்கள். பரீட்சைகளில், புதிய முயற்சிகளில் வேட்கை கொண்டவர்கள்.

அனைத்துக்கும் மேலாக, நமக்குப் பிறகு நம் பெயர் நிலைத்திருக்க உறுதியாக நமது எழுத்தை விட்டுச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள்.

இவர்கள் அத்தனை பேருக்கும் இந்த வகுப்பு உதவும்.

எப்படி?